புதன், 9 நவம்பர், 2011

பருத்தி புடவையாய் காய்க்குமா?

நமக்கு கிடைக்கவேண்டிய ஒன்று,அதிக
வேலை வைக்காமல் சுலபமாக உடனே
கிடைத்தால்,‘பருத்தி புடவையாய் காய்த்தது
போல்?’ என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி
பேச்சுவழக்கில் உபயோகிப்பதுண்டு.

பருத்தி புடவையாய்க் காய்கிறதோ இல்லையோ,
வெண்ணிற பருத்தியை தந்த பருத்தி செடிகள்,
இனி பல வண்ணங்களில் பருத்தியைத் தர
இருக்கின்ற என்பது, இன்றைய ‘The Hindu
Business Line நாளிதழில் வந்த மகிழ்ச்சியைத்
தரக் கூடிய செய்தி.

கர்நாடக மாநிலம் தார்வாரில் இருக்கின்ற
வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள
வேளாண் விஞ்ஞானிகள்,பத்து ஆண்டுகள்
அரும்பாடுபட்டு நடத்திய சீரிய ஆராய்ச்சியின்
பயனாக கரும் பழுப்பு, இளம் பழுப்பு, மற்றும்
பச்சை வண்ணங்களில் காய்க்கும் பருத்தி
செடியை உண்டாக்கியிருக்கிறார்களாம்.

இதன் பயனாக புடவை மற்றும் ஆடை தயாரிப்பு
நிறுவனங்களுக்கு, அவைகளை வண்ணமாக்கும்
(Dyeing) செலவு இருக்காது என்பதால் தயாரிப்பு
செலவு பாதியாக குறையும் என்பதும்,
நுகர்வார்களாகிய நமக்கு குறைந்த விலையில்
ஆடைகள் கிடைக்கும் என்பதும் கூடுதல் செய்திகள்.

வண்ணமாக்கும் போது ஏற்படும் சுற்றுப்புற
தூய்மைக்கேடு (Pollution) இனி ஒருபோதும்
இருக்காது என்பது இவைகளை விட
முக்கியமான ஒன்று.

1997 லேயே நாம் நாட்டில் வண்ணப் பருத்திகள்
உற்பத்தி செய்து இருந்தாலும், அவற்றின்
நூல் இழை குட்டையாக இருந்ததாலும்,
அவற்றின் வலிமை (Strength) குறைவாக
இருந்ததாலும், பிரபலமாக வில்லை. மேலும்
அவ்வகை பருத்திகளின் மகசூலும்
குறைவாகவே இருந்தன.

தற்போது கண்டு பிடித்திருக்கும் பருத்தி
இரகங்கள், நீண்ட இழையும் மிக்க வலிமையும்
அதிக மகசூலையும் தருபவை.மேலும் இவ்வகை
பருத்தி இரகங்கள், மரபணு மாற்றப்பட்ட
(Genetically Modified)இரகங்கள் இல்லை என்பது
ஆறுதலான விஷயம்.

இவைகளை வணிக ரீதியில் சாகுபடி
செய்வதற்கு காதி மற்றும் கிராமத்தொழில்
நிறுவனமும் சில தனியார்களும் ஆர்வம்
காட்டியுள்ளார்களாம்.

விரைவில் மேற்குறிப்பிட்ட வண்ணங்கள்
மட்டுமல்லாமல் மற்ற வண்ணங்களிலும்
பருத்திஇழைகள் கிடைக்கும் நாட்கள்
வெகு தொலைவில் இல்லை என நம்புவோம்.

வேளாண் பெருங்குடி மக்களுக்கும்,தொழில்
நிறுவனங்களுக்கும் நுகர்வோர்களுக்கும்
பேருதவி செய்திருக்கின்ற,தார்வார் வேளாண்
பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு நமது
வாழ்த்துக்கள்!

4 கருத்துகள்:

  1. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  2. //செடியை தோற்று வித்திருக்கிறார்களாம்//

    Good news.
    Sorry. Punctuation, typing error. Changes the intention.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே! தவறை சுட்டிக் காண்பித்தற்கு நன்றி. தவறைத் திருத்திவிட்டேன்.

    பதிலளிநீக்கு